குன்னுார் ஏல மையங்களில்40 சதவீத தேயிலை துாள் தேக்கம்குன்னுார் ஏல மையங்களில்40 சதவீத தேயிலை துாள் தேக்கம் ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.64 உயர்வு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.64 உயர்வு ...
முடியும் புரட்டாசி; நெருங்கும் தீபாவளிதமிழகத்தில் கறிக்கோழி விலை கிடு கிடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2014
01:09

சேலம்: புரட்டாசி மாதம் முடிவுக்கு வரும் நிலை மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், தமிழகத்தில், பிராய்லர் கறிக்கோழி விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் புரட்டாசி மாதம் பிறந்ததை அடுத்து, அசைவ உணவு வகைகளான ஆட்டுக்கறி, மீன், பிராய்லர் கறிக்கோழி, நாட்டுக்கோழி, நண்டு ஆகியவற்றின் விற்பனை வீழ்ச்சி கண்டது.புரட்டாசி சனிஅசைவ உணவு வகைகளில், பிற ரகங்களை விட, பிராய்லர் கறிக்கோழி விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டது. விற்பனை குறைந்ததால், விலையில் சரிவு ஏற்பட்டு, உயிருடன் கிலோ, 70 ரூபாய்க்கும், கறி கிலோ, 100 – 110 ரூபாய் வரையிலும் விற்பனைஆனது.
இந்நிலையில், புரட்டாசி மாதம் முடிவடைய இன்னும் மூன்றே நாட்கள் உள்ளன.அதே நேரத்தில், புரட்டாசி மாத சனிக்கிழமை முடிந்து விட்டதால், சைவத்துக்கு மாறிய அசைவ பிரியர்கள் பலர், மீண்டும் அசைவத்துக்கு மாறி வருகின்றனர்.இதனால், ஞாயிற்றுக் கிழமையான நேற்று முன்தினம் விலை உயர்வு ஏற்படாத நிலையில், நேற்று காலை முதல், பிராய்லர் கறிக்கோழியின் விலை, கிலோவுக்கு, 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
நேற்று உயிருடன் கோழி கிலோ, 110 ரூபாய்க்கும், கறி கிலோ, 150 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.சலுகை ரத்துதீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பிராய்லர் கறிக்கோழி வரத்து எதிர்பார்த்த அளவு இல்லாததால், அதன் விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.கறிக்கோழியின் விற்பனை அதிகரிக்க துவங்கி உள்ளதால், விலையும் உயர்ந்துள்ளது. இதனால், வியாபாரிகள், விற்பனை அதிகரிப்புக்காக வழங்கி வந்த தள்ளுபடி சலுகை அனைத்தையும் ரத்து செய்துள்ளனர். வியாபாரிகளின் இந்த நடவடிக்கை, அசைவ பிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)