பதிவு செய்த நாள்
14 அக்2014
01:09
சேலம்: புரட்டாசி மாதம் முடிவுக்கு வரும் நிலை மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், தமிழகத்தில், பிராய்லர் கறிக்கோழி விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் புரட்டாசி மாதம் பிறந்ததை அடுத்து, அசைவ உணவு வகைகளான ஆட்டுக்கறி, மீன், பிராய்லர் கறிக்கோழி, நாட்டுக்கோழி, நண்டு ஆகியவற்றின் விற்பனை வீழ்ச்சி கண்டது.புரட்டாசி சனிஅசைவ உணவு வகைகளில், பிற ரகங்களை விட, பிராய்லர் கறிக்கோழி விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டது. விற்பனை குறைந்ததால், விலையில் சரிவு ஏற்பட்டு, உயிருடன் கிலோ, 70 ரூபாய்க்கும், கறி கிலோ, 100 – 110 ரூபாய் வரையிலும் விற்பனைஆனது.
இந்நிலையில், புரட்டாசி மாதம் முடிவடைய இன்னும் மூன்றே நாட்கள் உள்ளன.அதே நேரத்தில், புரட்டாசி மாத சனிக்கிழமை முடிந்து விட்டதால், சைவத்துக்கு மாறிய அசைவ பிரியர்கள் பலர், மீண்டும் அசைவத்துக்கு மாறி வருகின்றனர்.இதனால், ஞாயிற்றுக் கிழமையான நேற்று முன்தினம் விலை உயர்வு ஏற்படாத நிலையில், நேற்று காலை முதல், பிராய்லர் கறிக்கோழியின் விலை, கிலோவுக்கு, 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
நேற்று உயிருடன் கோழி கிலோ, 110 ரூபாய்க்கும், கறி கிலோ, 150 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.சலுகை ரத்துதீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பிராய்லர் கறிக்கோழி வரத்து எதிர்பார்த்த அளவு இல்லாததால், அதன் விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.கறிக்கோழியின் விற்பனை அதிகரிக்க துவங்கி உள்ளதால், விலையும் உயர்ந்துள்ளது. இதனால், வியாபாரிகள், விற்பனை அதிகரிப்புக்காக வழங்கி வந்த தள்ளுபடி சலுகை அனைத்தையும் ரத்து செய்துள்ளனர். வியாபாரிகளின் இந்த நடவடிக்கை, அசைவ பிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|