பதிவு செய்த நாள்
14 அக்2014
01:11
மும்பை :இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் மேற்கொண்டு நேரடி முதலீடு, கடந்த செப்டம்பரில், இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 18,120 கோடி ரூபாயாக (302 கோடி டாலர்) உள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 125 கோடி டாலராகவும், கடந்தாண்டு செப்டம்பரில், 143 கோடி டாலராகவும் இருந்தன. கணக்கீட்டு மாதத்தில், கே.பி.சி., இன்டர்நேஷனல், கிளன்மார்க் பார்மசூட்டிக்கல்ஸ், வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், வெளிநாடுகளில் அதிகளவில் முதலீட்டை மேற்கொண்டு உள்ளன.குறிப்பாக, டாட்டா ஸ்டீல், சிங்கப்பூரில் உள்ள அதன் சொந்த நிறுவனத்தில், 188 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. இதையடுத்து, மெர்கேடார் (4.5 கோடி டாலர்), வீடியோகான் (2.20 கோடி டாலர்) உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|