பதிவு செய்த நாள்
14 அக்2014
01:12
நியூயார்க்: இந்திய பொருளாதாரம் மீட்சி பெறுவதில், இன்னும் சமச்சீரற்ற நிலையே நிலவுகிறது என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதில், இன்னும் சமச்சீரற்ற நிலையே காணப்படுகிறது.முந்தைய காலாண்டை காட்டிலும், நடப்பு காலாண்டில், பொருளாதார வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கும் என, நினைக்கிறேன். எனினும், நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, நிச்சயம் 5 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இது, அடுத்த நிதியாண்டில், 6 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும்.அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து கவலையில்லை. இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவில் உள்ளது.இவ்வாறு, ராஜன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|