பதிவு செய்த நாள்
14 அக்2014
01:12
மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று, பங்கு வியாபரம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.சாதமற்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், காலையில் பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. இந்நிலையில், மதியத்திற்கு பிறகான வர்த்தகத்தில், சில்லரை முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகளில் ஆர்வத்துடன் வாங்கியதை அடுத்து, 'சென்செக்ஸ்' மற்றும் 'நிப்டி' தலா, 0.30 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தன.
நேற்றைய வியாபாரத்தில், உலோகத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக, 1.37 சதவீதம் அதிகரித்தது. இதையடுத்து, வங்கி (1.35 சதவீதம்), தகவல் தொழில்நுட்பம் (1.17 சதவீதம்) ஆகிய துறை குறியீட்டு எண்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்தன.அதேசமயம், ரியல் எஸ்டேட், மருந்து, நுகர்பொருள், பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 86.69 புள்ளிகள் அதிகரித்து, 26,384.07 புள்ளிகளில் நிலைகொண்டது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா பவர், கோல் இந்தியா, டி.சி.எஸ்., உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், மகிந்திரா, சிப்லா, எல் அண்டு டி உள்ளிட்ட 13 நிறுவனப் பங்குகளின் சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 24.30 புள்ளிகள் உயர்ந்து, 7,884.25 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|