பொருளாதாரம் மீட்சி பெறுவதில் சமச்சீரற்ற நிலை:ரகுராம் ராஜன் பொருளாதாரம் மீட்சி பெறுவதில் சமச்சீரற்ற நிலை:ரகுராம் ராஜன் ... ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.61.41 ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.61.41 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 87 புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2014
01:12

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று, பங்கு வியாபரம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.சாதமற்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், காலையில் பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. இந்நிலையில், மதியத்திற்கு பிறகான வர்த்தகத்தில், சில்லரை முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகளில் ஆர்வத்துடன் வாங்கியதை அடுத்து, 'சென்செக்ஸ்' மற்றும் 'நிப்டி' தலா, 0.30 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தன.
நேற்றைய வியாபாரத்தில், உலோகத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக, 1.37 சதவீதம் அதிகரித்தது. இதையடுத்து, வங்கி (1.35 சதவீதம்), தகவல் தொழில்நுட்பம் (1.17 சதவீதம்) ஆகிய துறை குறியீட்டு எண்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்தன.அதேசமயம், ரியல் எஸ்டேட், மருந்து, நுகர்பொருள், பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 86.69 புள்ளிகள் அதிகரித்து, 26,384.07 புள்ளிகளில் நிலைகொண்டது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா பவர், கோல் இந்தியா, டி.சி.எஸ்., உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், மகிந்திரா, சிப்லா, எல் அண்டு டி உள்ளிட்ட 13 நிறுவனப் பங்குகளின் சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 24.30 புள்ளிகள் உயர்ந்து, 7,884.25 புள்ளிகளில் நிலைபெற்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)