பதிவு செய்த நாள்
16 அக்2014
00:34
புதுடில்லி:நடப்பு 2014–15ம் நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்.,–செப்.,), நாட்டின் மறைமுக வரி வசூல், 5.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,41,811 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 2,28,619 கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கலால், சுங்கம் மற்றும் சேவை வரிகள், மறைமுக வரி வசூலின் கீழ் இடம்பெறுகிறது. மதிப்பீட்டு காலத்தில், கலால் வரி வசூல், 0.6 சதவீதம் பின்னடைவை கண்டு, 75,021 கோடி ரூபாயாக உள்ளது.
அதேசமயம், சுங்க வரி வசூல், 5.5 சதவீதம் அதிகரித்து, 84,643 கோடியிலிருந்து, 89,324 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. சேவை வரி வசூலை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு, எதிர்மறை வரிவிதிப்பு பட்டியல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, இப்பட்டியலில் அடங்கியுள்ளவை தவிர்த்து, இதர சேவைகள் அனைத்திற்கும் வரி விதிக்கப்படுகிறது. இதன் பயனாக, கணக்கீட்டு காலத்தில்,
நடப்பு முழு நிதியாண்டில், மறைமுக வரிகள் வாயிலாக, 6.24 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த செப்டம்பரில் மட்டும் மறைமுக வரி வசூல், 12.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 48,012 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, சுங்க வரி வசூல், 32.8 சதவீதம் அதிகரித்து, 18,116 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போன்று, சேவை வரி வசூலும், 5.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 14,755 கோடியிலிருந்து, 15,608 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேசமயம், கலால் வரி வசூல், 0.4 சதவீதம் குறைந்து, 14,288 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|