பதிவு செய்த நாள்
18 அக்2014
23:38
புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்தில், பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களில், முதலீட்டாளர்கள் 30,517 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.இது, முந்தைய ஆகஸ்டில், 1 லட்சம் கோடி ரூபாயாகவும், ஜூலையில், 1.13 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பரில், ஒட்டு மொத்த அளவில், பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 54.1 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.அதேசமயம், 53.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதையடுத்து,
இவ்வகை திட்டங்களில், மேற்கொள்ளப்பட்ட நிகரமுதலீடு, 30,517 கோடி ரூபாயாக உள்ளது என, ‘செபி தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, நிகர அளவின் அடிப்படையில், 3 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|