பதிவு செய்த நாள்
24 அக்2014
02:46
மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதன் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட் போனில், ‘எம்–பாஸ்புக்’ எனப்படும் வங்கி கணக்கு புத்தக வசதியை அறிமுகம் செய்துள்ளது.இந்த வசதியை அறிமுகம் செய்து வைத்த இவ்வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மேலும் கூறியதாவது:நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், ‘எம்–பாஸ்புக்’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம், வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை விவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதோடு, ஆண்டு முழுவதற்கான வரவு செலவு கணக்குகளையும் அதில் பராமரிக்கலாம்.தற்போது, இந்த வசதி ஆண்ட்ராய் வகை போன்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தவசதி விரைவில், ஐ.ஓ.எஸ்., மற்றும் பிளாக்பெர்ரி வகை போன்களிலும் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|