பதிவு செய்த நாள்
27 அக்2014
03:19
ஒட்டன்சத்திரம்;முருங்கைக்காய் விலை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் உயர்ந்தும், ராமநாதபுரம் மார்க்கெட்டில் குறைந்தும் உள்ளது.ஒட்டன்சத்திரம் மற்றும் அருகே உள்ள கிராமப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கள்ளிமந்தையம், தாராபுரம், இடையகோட்டை, தேனி, ஆண்டிபட்டி பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் முருங்கைக்காய்கள் வரத்து குறைய துவங்கியுள்ளது. கடந்த வாரம் கிலோ 25 ரூபாய்க்கு விற்ற கரும்பு முருங்கை, 3 ரூபாய் அதிகரித்து ரூ.28 க்கும், ரூ.22க்கு விற்பனையான செடிமுருங்கை 3 ரூபாய் அதிகரித்து ரூ.25 க்கும் விற்பனையானது.ராமநாதபுரம்: ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை, மண்டபம், சத்திரக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை காய் நல்ல விளைச்சல் கண்டுள்ளது.
இதனால், ராமநாதபுரம் காய்கறி மார்க்கெட்டில் முருங்கை வரத்து அதிகரித்து, விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மூன்றரை அடி உயர யாழ்ப்பாணம் முருங்கைக்காய் ஒன்று ரூ.6 க்கும், ஒன்றரை அடி உயர நாட்டு முருங்கைக்காய் ஒன்று ரூ.2.50 க்கும் விற்பனையானது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் முருங்கை ரூ.12 க்கும், நாட்டு முருங்கை ரூ.4 க்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|