பதிவு செய்த நாள்
27 அக்2014
03:28
புதுடில்லி:மத்திய நிதி அமைச்சகம், 988 கோடி ரூபாய் மதிப்பிலான, 20 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி,பிரிசீனியஸ் கபி ஆன்காலஜி நிறுவனத்தின்,119 கோடி ரூபாய்,அம்னியல் பார்மசூட்டிகல்ஸ் கம்பெனியின்,205 கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளன.இந்தஸ்இந்த் பேங்க், வெளிநாட்டு முதலீட்டை, 74 சதவீதமாக அதிகரித்து கொள்வதற்கான திட்டத்திற்கும் அனுமதி தரப்பட்டுள்ளது.மேலும், தமிழகத்தை சேர்ந்த ஈக்விட்டாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின், 325 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டு திட்டத்திற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, மும்பையைச் சேர்ந்த தாரா இந்தியா நிறுவனத்தின்,306 கோடி ரூபாய்,தொலைத்தொடர்பு துறை நிறுவனமான வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் 2 கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளன.அதேசமயம்,சிஸ்டமா சியாம் டெலிசர்வீசஸ் உள்ளிட்ட, 5 நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கான அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|