பதிவு செய்த நாள்
27 அக்2014
03:39
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து விலை மூட்டைக்கு 300 ரூபாய் உயர்ந்துள்ளது. விற்பனை மந்தத்தால், எண்ணெய், சர்க்கரை விலைகளில் மாற்றமில்லை.
உயரவில்லை:எண்ணெய் மார்க்கெட்டில் கடந்த வாரத்தைப் போன்றே கடலை எண்ணெய் (15 கிலோ டின்) 1,450, நல்லெண்ணெய் 3,200, சன்பிளவர் எண்ணெய் 1,150, பாமாயில்,910 ரூபாயாக உள்ளது.80 கிலோ நிலக்கடலை பருப்பு,4,700, 100 கிலோ கடலைபுண்ணாக்கு 4,200 ரூபாய்க்கு விற்பனையானது. விற்பனை மந்தமாக இருப்பதால், இவற்றின் விலை உயரவில்லை என, வியாபாரிகள் தெரிவித்தனர்.சர்க்கரை, 100 கிலோ 3,150 ரூபாயாக உள்ளது. 90 கிலோ மைதா ரூ.3,045க்கும், 90 கிலோ ரவை 3,365 ரூபாய்க்கும் விற்பனையானது. 55 கிலோ பொரிகடலை 2,510 ரூபாயாக உள்ளது. இவற்றின் விலைகளில் மாற்றமில்லை.
உளுந்து விலை உயர்வு: 100 கிலோ பர்மா உளுந்தில் பொடி வகை 5,200 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட மூட்டைக்கு 300 ரூபாய் உயர்ந்துள்ளது. இதில் பருவட்டு 6,000 நாட்டு உளுந்து 5,600 ரூபாய்க்கு விற்பனையானது.100 கிலோ உளுத்தம் பருப்பில் பர்மா பொடி வகை 6,700க்கு விற்பனையானது.இது மூட்டைக்கு 300 ரூபாய் உயர்ந்துள்ளது. இதில் பருவட்டு வகை 7,300, நாடு வகை 7,800 ரூபாய்க்கு விற்பனையானது.
வரத்து இல்லை:முதல் ரக பாசிப்பருப்பு 100 கிலோ 9,800, இரண்டாம் ரகம் 9,500 ரூபாய்க்கு விற்பனைஆனது.100 கிலோ துவரம் பருப்பில் நாடுவகை 7,500, இரண்டாம் வகை 6,800, பொடி வகை 6,600 ரூபாய்க்கு விற்பனையானது. 100 கிலோ ஆந்திரா குண்டூர் வத்தல் 8,100 முதல் 8,400 ரூபாய் வரை விற்பனையானது. நாட்டு வத்தல் வரத்து இல்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|