பதிவு செய்த நாள்
28 அக்2014
01:50
புதுடில்லி :சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு, 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதன் பின்னணி குறித்து, விசாரிக்கப்பட்டு வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.சுவிட்சர்லாந்தில் இருந்து, இந்தியாவுக்கு, இதுவரை இல்லாத வகையில், இந்தாண்டு, 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் ஏற்றுமதியானதாக தெரியவந்துள்ளது.குறிப்பாக, செப்டம்பரில் மட்டும், 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், சுவிட்சர்லாந்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில், தங்கத்துக்கான தேவை, இந்தியாவில் அதிகரிக்கும் என்பதால், அதன் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், சுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கை, தற்போது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருப்பு பணத்தை, தங்கமாக மாற்றி, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|