பதிவு செய்த நாள்
28 அக்2014
01:51
மும்பை :நாட்டின் பங்கு வியபாரம், நேற்று மிகவும் சுணக்கமாக இருந்தது.சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 0.37 சதவீதம் மற்றும் 0.29 சதவீதம் சரிவை கண்டன.நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண், அதிகபட்சமாக, 3.79 சதவீதம் வீழ்ச்சி கண்டது.
இதையடுத்து, எண்ணெய் – எரிவாயு (–1.45 சதவீதம்), நுகர் பொருட்கள் (1.06 சதவீதம்) ஆகிய துறை குறியீட்டு எண்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவை கண்டன.அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், பொறியியல், வங்கி, மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.ஐரோப்பிய மண்டல வங்கிகளின் நிதி நிலை முடிவுகள் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நன்கு இருந்ததையடுத்து, அந்நாடுகளில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 98.15 புள்ளிகள் சரிவடைந்து, 26,752.90 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், இந்துஸ்தான் யூனிலிவர், டாட்டா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், விப்ரோ உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், பெல், டாக்டர் ரெட்டீஸ், கோல் இந்தியா உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 22.85 புள்ளிகள் குறைந்து, 7,991.70 புள்ளிகளில் நிலைபெற்றது.இப்பங்குச் சந்தையில், 30 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 20 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|