நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.1.09 லட்சம்  கோடியாக வளர்ச்சிநவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.1.09 லட்சம் கோடியாக வளர்ச்சி ... கச்சா எண்ணெய் இறக்குமதியைபரவலாக்க திட்டம்: தர்மேந்திர பிரதான் கச்சா எண்ணெய் இறக்குமதியைபரவலாக்க திட்டம்: தர்மேந்திர பிரதான் ...
கச்சா எண்ணெய் இறக்குமதியைபரவலாக்க திட்டம்: தர்மேந்திர பிரதான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2014
04:17

புதுடில்லி :கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, ஒரு சில நாடுகளை மட்டும் நம்பி இருக்காமல், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் அதன் இறக்குமதியை பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, அமெரிக்க அதிகாரிகளை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.மத்திய கிழக்கு நாடுகளில் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளால்,கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிப்படைகிறது. குறிப்பாக, ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட வன்முறைகளின் காரணமாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி வெகுவாக பாதிப்படைந்துள்ளது.
கடந்த 2013–14ம் நிதியாண்டில், ஈராக்கிலிருந்து, 2.46 கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி (18.92 கோடி டன்) அளவில், 13.02 சதவீதம் மட்டுமே.அதேசமயம், தென் அமெரிக்காவிலிருந்து, 3.17 கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதியாகியுள்ளது. குறிப்பாக, வெனிசுலா நாட்டிலிருந்து அதிகளவாக, 2.15 கோடி டன் கச்சா எண்ணெய் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, கொலம்பியாவிலிருந்தும், 63 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.எனவே, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, மத்திய கிழக்கு நாடுகளை மட்டும் சார்ந்திராமல், லத்தீன் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.சர்வதேச நாடுகளின் அரசியல், பொருளதார சூழ்நிலைகள் அவ்வப்போது மாறி வருகின்றன. இந்நிலையில், கச்சா எண்ணெய் கொள்முதலை பரவலாக்க வேண்டியது மிக அவசியம் என, பிரதான் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)