பதிவு செய்த நாள்
29 அக்2014
04:17
புதுடில்லி :கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, ஒரு சில நாடுகளை மட்டும் நம்பி இருக்காமல், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் அதன் இறக்குமதியை பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, அமெரிக்க அதிகாரிகளை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.மத்திய கிழக்கு நாடுகளில் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளால்,கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிப்படைகிறது. குறிப்பாக, ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட வன்முறைகளின் காரணமாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி வெகுவாக பாதிப்படைந்துள்ளது.
கடந்த 2013–14ம் நிதியாண்டில், ஈராக்கிலிருந்து, 2.46 கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி (18.92 கோடி டன்) அளவில், 13.02 சதவீதம் மட்டுமே.அதேசமயம், தென் அமெரிக்காவிலிருந்து, 3.17 கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதியாகியுள்ளது. குறிப்பாக, வெனிசுலா நாட்டிலிருந்து அதிகளவாக, 2.15 கோடி டன் கச்சா எண்ணெய் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, கொலம்பியாவிலிருந்தும், 63 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.எனவே, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, மத்திய கிழக்கு நாடுகளை மட்டும் சார்ந்திராமல், லத்தீன் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.சர்வதேச நாடுகளின் அரசியல், பொருளதார சூழ்நிலைகள் அவ்வப்போது மாறி வருகின்றன. இந்நிலையில், கச்சா எண்ணெய் கொள்முதலை பரவலாக்க வேண்டியது மிக அவசியம் என, பிரதான் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|