பதிவு செய்த நாள்
29 அக்2014
04:19
மும்பை: ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, டிசம்பரில் வெளியிட உள்ள நிதி ஆய்வு கொள்கையில், மாற்றம் எதுவும் மேற்கொள்ளாது.அதேசமயம், வரும் பிப்ரவரியில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதங்களை குறைக்க அதிக வாய்ப்புள்ளது என, பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் தெரிவித்துள்ளது.குறிப்பாக, ரபி பருவ சாகுபடியில், உணவு தானிய உற்பத்தி சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உணவுப் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
இவை தவிர, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதும், பணவீக்கம் குறைவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.இதையடுத்து, வரும் 2015ம் ஆண்டு ஜனவரியில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் இலக்கு அளவான, 8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அவ்வாறு இந்த இலக்கு எட்டப்படும் நிலையில், வரும் பிப்ரவரி மாதத்தில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கக்கூடும் என, பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|