பதிவு செய்த நாள்
29 அக்2014
04:27
புதுடில்லி: ஆன் – லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஸ்நாப்டீல் நிறுவனத்தில், ஜப்பானைச் சேர்ந்த தொலைத்தொடர்பு மற்றும் இணையதள நிறுவனமான சாப்ட்பேங்க், 3,762 கோடி ரூபாயை (62.70 கோடி டாலர்) முதலீடு செய்ய உள்ளது.இதுவே, இந்தியாவில் ஆன் – லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் அதிகபட்ச முதலீடாகும்.ஸ்நாப்டீல் நிறுவனம், இந்த முதலீட்டை, வர்த்தகத்தை விரிவு படுத்தல், மொபைல் தொழில்நுட்பத்தில் களமிறங்குதல் போன்ற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி கொள்ளும்.ஸ்நாப்டீல் தவிர்த்து, வாடகை டாக்சி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், ஓலா நிறுவனத்திலும், சாப்ட்பேங்க், 1,260 கோடி ரூபாயை (21 கோடி டாலர்) முதலீடு செய்கிறது. வரும் ஆண்டுகளில், இந்தியாவில், 1,000 கோடி டாலர் (60 ஆயிரம் கோடி ரூபாய்) அளவிற்கு முதலீடு மேற்கொள்ள இருப்பதாக, சாப்ட்பேங்க் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|