வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 அக்2014
14:09
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வந்த வேளையில் சென்செக்ஸ் இன்று புதிய உச்சத்தை எட்டியது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், சென்செக்ஸ் குறியீட்டு எண் 48.27 புள்ளிகள் உயர்ந்து 27,146.44 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 12.10 புள்ளிகள் உயர்ந்து 8,102.55 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. இந்நிலையில் முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் தொடர்ந்து உயர்ந்து வந்த பங்குசந்தைகள் மதியம் 1மணியளவில் புதிய உச்சத்தை தொட்டன. வர்த்தகநேர முடிவின் போது சென்செக்ஸ் 248.16 புள்ளிகள் உயர்ந்து 27,346.33 எனும் புதிய உச்சத்தை தொட்டது. நிப்டி 78.75 புள்ளிகள் உயர்ந்து 8,169.20 புள்ளிகளுடன் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் 1569 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1354 நிறுவன பங்குகள் சரிந்தும், 120 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் 3 சதவீதமும், டிசிஎஸ்., ஹிண்டால்கோ, இன்போசிஸ், ஸ்டெர்லைட், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா சிப்லா, டாடா பவர், ஹீரோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 30,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 30,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 30,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 30,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!