பதிவு செய்த நாள்
02 நவ2014
00:57
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் வரத்துகுறைவால் பாசிப்பருப்பு மூடைக்கு 800 ரூபாய் உயர்ந்தது. ‘வாட்’ வரி விதிப்பால் சர்க்கரை மூடைக்கு 160 ரூபாய் உயர்ந்துஉள்ளது.எண்ணெய் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் (15 கிலோ டின்) கடந்த வாரத்தை விட 50 ரூபாய் குறைந்து 1,400 ரூபாய்க்கு விற்றது. நல்லெண்ணெய் 3,200 ரூபாய்; சன்பிளவர் எண்ணெய் டின்னுக்கு 15 ரூபாய் உயர்ந்து 1,150 ரூபாய்க்கு விற்றது. பாமாயில் 925 ரூபாய்; 80 கிலோ நிலக்கடலை பருப்பு 4,700 ரூபாய்; 100 கிலோ கடலை புண்ணாக்கு 4,200 ரூபாய்க்கு விற்றது.சர்க்கரை உயர்ந்தது: தமிழக அரசின் ‘வாட்’ வரி அமலுக்கு வந்ததால் 100 கிலோ சர்க்கரை கடந்த வாரத்தைவிட மூடைக்கு 160 ரூபாய் உயர்ந்து 3,310 ரூபாயாக உள்ளது. 90 கிலோ மைதா 3,045 ரூபாய்; 90 கிலோ ரவை மூடைக்கு 75 ரூபாய் குறைந்து 3,290 ரூபாய்க்கு விற்றது. 55 கிலோ பொரிகடலை மூடைக்கு 110 ரூபாய் குறைந்து 2,400 ரூபாயாக உள்ளது.பாசிப்பருப்பு விலை உயர்வு: 100 கிலோ பர்மா உளுந்தில் பொடிவகை 5,200 ரூபாய்க்கு விற்றது.
இது, கடந்த வாரத்தை விட மூடைக்கு 300 ரூபாய் உயர்ந்தது. இதில் பருவட்டு 6,000 ரூபாய், நாட்டு உளுந்து 5,800 ரூபாய்க்கு விற்றது. 100 கிலோ உளுந்தம் பருப்பில் பர்மா பொடிவகை 6,700 ரூபாய்க்கு விற்றது. இதில் பருவட்டு வகை 7,300; நாடு வகை 7,800 ரூபாய்க்கு விற்றது.100 கிலோ முதல் ரக பாசிப்பருப்பு வரத்துகுறைவால் மூடைக்கு 800 ரூபாய் உயர்ந்து 10,600 ரூபாய்க்கு விற்றது; இதில் இரண்டாம் ரகம் 10,300 ரூபாய்.1 00 கிலோ துவரம் பருப்பில் நாடுவகை 7,500 ரூபாய்; இரண்டாம் வகை 6,800 ரூபாய்; பொடி வகை 6,600 ரூபாய்க்கு விற்றது.100 கிலோ ஆந்திரா குண்டூர் வத்தல் மூடைக்கு 300 ரூபாய் உயர்ந்து 8,300 ரூபாய் முதல் 8,700 ரூபாய் வரை விற்றது. நாட்டுவத்தல் வரத்து இல்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|