ஆன்–லைன் சில்லரை வர்த்தக சந்தைரூ.88 ஆயிரம் கோடியை தாண்டும்ஆன்–லைன் சில்லரை வர்த்தக சந்தைரூ.88 ஆயிரம் கோடியை தாண்டும் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.40 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.40 ...
ரோஜாவில் டவுனியா நோய் தாக்குதல்:இலை உதிர்வதால் விவசாயிகள் கவலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2014
00:20

ஓசூர்:ஓசூர் பகுதியில், கனமழை மற்றும் மூடுபனி காரணமாக, ரோஜா செடிகளில், டவுனியா என்ற இலை உதிரும் நோய், வேகமாக பரவி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாவில், ஆண்டு முழுவதும் நிலவும் மிதமான தட்பவெப்ப நிலை மற்றும் நல்ல மண் வளத்தையும் பயன்படுத்தி, 4,000 ஏக்கர் பரப்பளவில், பசுமை குடில் மூலம் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.மேலும், ஓசூர் அடுத்த அமுதகொண்டப்பள்ளியில் உள்ள, டான்ப்ளோரா மற்றும், 40க்கும் மேற்பட்ட தனியார் மலர் உற்பத்தி பண்ணைகளில் இருந்தும், ஆண்டு முழுவதும், ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும், ரோஜா மலர்கள், விற்பனைக்கு அனுப்பப் படுகிறது. இந்நிலையில், ஓசூர் பகுதியில், கடந்த ஒரு மாதமாக, கடும் குளிர் காற்று, மூடுபனி மற்றும் கனமழை பெய்து வருகிறது.அதனால், ரோஜா செடிகளில், டவுனியா என்ற நோய் வேகமாக பரவுகிறது. இந்நோய் தாக்கிய செடிகளில் உள்ளஇலைகள் முழுவதும் உதிர்ந்து, கீழே விழுந்து விடுவதால், தரமான மலர்கள் உற்பத்தியாவதில்லை. இதனால், இம்மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை என, விவசாயிகள் தெரிவித்தனர்.மொட்டுகளும், செடிகளில் இருந்து உதிர்ந்து விழுகிறது. இந்நோய் முற்றிய செடிகள், முற்றிலும் கருகி நாசமடைந்து வருகிறது.
ஓசூர் அடுத்த பாகலுார், பேரிகை பகுதியில், ரோஜா தோட்டங்களில், டவுனியா நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திறந்தவெளி ரோஜா சாகுபடியில், டவுனியா நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது.
இதுகுறித்து, சிறு விவசாயிகள் சங்க நிர்வாகி பாலசிவபிரசாத் கூறியதாவது:ரோஜாக்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நவம்பர் மாதம் முகூர்த்த நாள் அதிகளவில் வருவதால், விலை உயரும் என, எதிர்பார்த்தோம். ஆனால், தற்போது டவுனியா நோய் தாக்கி வருவதால், வரும், நான்கு மாதங்களுக்கு, ரோஜாக்கள் சாகுபடி பாதிக்கப்படும்.அதனால், விவசாயிகள், மிகவும் கவலையில் உள்ளனர். தற்போது, டவுனியா நோய் தாக்குதல் இருந்தபோதிலும், கனமழை மற்றும் மூடுபனி அதிகளவு உள்ளதால், நோயின் தாக்குதல், மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)