ரோஜாவில் டவுனியா நோய் தாக்குதல்:இலை உதிர்வதால் விவசாயிகள் கவலைரோஜாவில் டவுனியா நோய் தாக்குதல்:இலை உதிர்வதால் விவசாயிகள் கவலை ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.40 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.40 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன விற்பனையில் மீண்டும் சுணக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2014
00:33

புதுடில்லி:சென்ற அக்டோபர் மாதத்தில், உள்நாட்டில் பல முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை மீண்டும் சுணக்கம் கண்டுள்ளது.பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் நிலையில், பணவீக்கம், அதிக வட்டிவிகிதம் போன்றவை, வாடிக்கையாளர்களின் கார் வாங்கும் ஆர்வத்தை குறைத்துள்ளது என, போர்டு இந்தியாவின் செயல் இயக்குனர் அனுராக் மெக்ரோத்ரா கூறி உள்ளார்.எனினும், டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு விலக்கி கொண்டதையடுத்து, வரும் மாதங்களில், கார் விற்பனை சூடுபிடிக்க வாய்ப்புள்ளது என, இத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாருதி சுசூகி: தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள, மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின், கார் விற்பனை, சென்ற அக்டோபரில், 1,03,973 ஆக சற்று சரிவை கண்டுள்ளது.சென்ற ஆண்டு இதே மாதத்தில், இந்நிறுவனம், 1,05,087 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 1.1 சதவீதம் குறைந்துள்ளது.அதேசமயம், உள்நாட்டில் இந்நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை, 1 சதவீதம் உயர்ந்து, 96,062லிருந்து, 97,069 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், கார் ஏற்றுமதி, 23.5 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 9,025லிருந்து,6,904ஆக சரிவைக் கண்டுள்ளது.
மகிந்திரா: மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் கார் விற்பனை,15.39 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 50,558லிருந்து, 42,776ஆக சரிவடைந்துள்ளது.குறிப்பாக, உள்நாட்டில் கார் விற்பனை, 15.71 சதவீதமும், ஏற்றுமதி, 9.7 சதவீதமும் சரிவை கண்டுள்ளன.
போர்டு இந்தியா: கணக்கீட்டு மாதத்தில், போர்டு இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 22.12 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 14,935லிருந்து, 11,630 ஆக சரிவடைந்துள்ளது.குறிப்பாக, உள்நாட்டில் கார்கள் விற்பனை, 26.62 சதவீதமும், ஏற்றுமதி, 14.98 சதவீதமும் சரிவை கண்டுள்ளன.மேலும், நிசான் நிறுவனத்தின் கார் விற்பனையும், சென்ற அக்டோபரில், 16 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 4,880 என்ற எண்ணிக்கையிலிருந்து, 4,106 ஆக சரிவடைந்துள்ளது.அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை, 11.54 சதவீதம் அதிகரித்து, 56,010 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு அக்டோபரில், 50,212 ஆக இருந்தது.
குறிப்பாக, உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 5.57 சதவீதம் வளர்ச்சி கண்டு, 36,002லிருந்து, 38,010 ஆக உயர்ந்துள்ளது.மேலும், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதியும், 26.67 சதவீதம் உயர்ந்து, 14,210 என்ற எண்ணிக்கையிலிருந்து, 18 ஆயிரமாக அதிகரித்துள்ளது.நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் சூடுபிடிக்கும் நிலையில், வரும் மாதங்களில், மோட்டார் வாகன விற்பனை சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது என, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனியின் வாகன விற்பனை, சென்ற அக்டோபரில், 22 சதவீதம் உயர்ந்து, 2,41,044ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 1,97,905ஆக இருந்தது.– நமது நிருபர் –

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)