பதிவு செய்த நாள்
04 நவ2014
01:21
புதுடில்லி: நாட்டின் தேயிலை உற்பத்தி, நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்., – ஆக.,), 2.48 சதவீதம் சரிவடைந்து, 61.07 கோடி கிலோவாக குறைந்துள்ளது.குறிப்பாக, அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் இதன் உற்பத்தி சரிவை கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், தேயிலை உற்பத்தி, 62.63 கோடி கிலோவாக அதிகரித்து காணப்பட்டது என, தேயிலை வாரியத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கணக்கீட்டு காலத்தில், மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில், தேயிலை உற்பத்தி, 52.52 கோடி கிலோவிலிருந்து, 50.08 கோடி கிலோவாக குறைந்து உள்ளது.அதேசமயம், தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில், இதன் உற்பத்தி, 10.11 கோடி கிலோவிலிருந்து, 10.99 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 120.88 கோடி கிலோவாக இருந்தது. சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியில், சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|