நாட்டின் தேயிலை உற்பத்தி 61 கோடி கிலோவாக சரிவுநாட்டின் தேயிலை உற்பத்தி 61 கோடி கிலோவாக சரிவு ... தங்கம் விலை ரூ.16 குறைந்தது தங்கம் விலை ரூ.16 குறைந்தது ...
மானிய விலையில் ‘காஸ்’ விற்பனை: ரூ.188 கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2014
01:24

புதுடில்லி: மானிய விலையில் எரிபொருட்களை விற்பனை செய்வதால், எண்ணெய் சந்தைப்படுத்தும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு, நாள் ஒன்றுக்கு ஏற்படும் இழப்பு, 35 சதவீதம் அதிகரித்து, 188 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மண்ணெண்ணெய்இதன்படி, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, பொது வினியோக திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விற்பனை மூலம், 27.60 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
இதே போன்று, 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சமையல் எரிவாயு உருளை விற்பனையிலும், 393.50 ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த இழப்பு முன்பு முறையே, 31.22 மற்றும் 404.64 ஆக அதிகரித்து காணப்பட்டது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளதையடுத்து, நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு குறைந்துள்ளது.எனினும், நாள் ஒன்றுக்கு, 139 கோடி ரூபாயாக இருந்த இழப்பு, தற்போது, 188 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து, எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.மத்திய அரசு, கடந்த அக்டோபர் மாதம், டீசல் மீதான விலை கட்டுப்பாட்டை விலக்கி கொண்டதையடுத்து, மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகிய இரண்டு மட்டுமே மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
அடக்க விலைக்கு குறைவாக, எரிபொருள்களை விற்பனை செய்ததால், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், எண்ணெய் நிறுவனங்களுக்கு, 51,110 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.பெட்ரோல் விலை:இது, கடந்த, 2013–14ம் முழு நிதியாண்டில், 1,39,869 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த, 2010ம் ஆண்டு ஜூன் மாதம், பெட்ரோல் விலை நிர்ணயம் எண்ணெய் நிறுவனங்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்., 18ம் தேதி முதல், டீசல் மீதான விலை கட்டுப்பாடும் விலக்கி கொள்ளப்பட்டது.இதையடுத்து, டீசல் விலை இரண்டு முறை அதாவது, அக்., 19ம் தேதி, 3.37 ரூபாயும், நவ., 1ம் தேதி, 2.25 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)