பதிவு செய்த நாள்
04 நவ2014
01:27
மும்பை: நான்கு நாட்கள் ஏற்றத்திற்கு பின், நேற்று பங்கு வர்த்தகம் மீண்டும் திடீர் சுணக்கம் கண்டது.பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை, அதிகரித்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததையடுத்து, சென்செக்ஸ் சரிவுடனும், நிப்டி சிறிய ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.குறிப்பாக, நேற்றைய வர்த்தகத்தில், நுகர்வோர் சாதன துறையை சேர்ந்த குறியீட்டு எண், 1.48 சதவீதம் சரிவை கண்டது.
இதையடுத்து, மோட்டார் வாகனம், எண்ணெய் – எரிவாயு துறைகளைச் சேர்ந்த பங்குகளும், குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்தன.அதேசமயம், ரியல் எஸ்டேட், வங்கி, மருந்து, பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 5.45 புள்ளிகள் குறைந்து, 27,860.38 புள்ளிகளில் நிறைவடைந்தது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், கெயில், மகிந்திரா, மாருதி உள்ளிட்ட, 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சேசா ஸ்டெர்லைட், ஆக்சிஸ் பேங்க், இன்போசிஸ், சன்பார்மா உள்ளிட்ட, 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 1.95 புள்ளிகள் உயர்ந்து, 8,324.15 புள்ளிகளில் நிலைகொண்டது.மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு, மொகரம் பண்டிகையை முன்னிட்டு இன்றும், குருநானக் ஜெயந்தியையொட்டி, வியாழக்கிமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|