எண்ணெய் வித்­துக்கள் பயி­ரிடும் பரப்பு விறு­விறுஎண்ணெய் வித்­துக்கள் பயி­ரிடும் பரப்பு விறு­விறு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.50 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.50 ...
தொலை­பேசி சந்­தா­தாரர் எண்­ணிக்கை 94 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2014
05:16

புது­டில்லி:நடப்பு, 2014ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரை­யி­லான காலாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த தொலை­பேசி சந்­தா­தாரர் எண்­ணிக்கை, 94.29 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது.முந்­தைய ஜன.,– மார்ச் காலாண்டில், இந்த எண்­ணிக்கை, 93.30 கோடி­யாக இருந்­தது. ஆக, மதிப்­பீட்டு காலாண்டில், தொலை­பேசி சந்­தா­தாரர் எண்­ணிக்கை, 1.07 சத­வீதம் வளர்ச்சி கண்­டுள்­ளது என, இந்­திய தொலைத் தொடர்பு ஒழுங்­கு­முறை ஆணையம் (டிராய்)தெரி­வித்­துள்­ளது.குறிப்­பாக, மதிப்­பீட்டு காலாண்டில், மொபைல் போன் (ஜி.எஸ்.எம்+சி.டி.எம்.ஏ.,) சந்­தா­தாரர் எண்­ணிக்கை, 1.04 கோடி அதி­க­ரித்து, 90.45 கோடி­யி­லி­ருந்து, 91.49 கோடி­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, 1.15 சத­வீத வளர்ச்­சி­யாகும்.
அதே­ச­மயம், சாதா­ரண தொலை­பேசி வாடிக்­கை­யாளர் எண்­ணிக்கை, 2.85 கோடி­யி­லி­ருந்து, 2.80 கோடி­யாககுறைந்­துள்­ளது.கணக்­கீட்டு காலாண்டில், இன்­டர்நெட் சந்­த­தாரர் எண்­ணிக்கை, 3 சத­வீதம் உயர்ந்து, 25.16 கோடி­யி­லி­ருந்து, 25.91 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது.ஒரு ஜி.எஸ்.எம்., வாடிக்­கை­யாளர் மூலம் கிடைக்கும் மாதாந்­திர சரா­சரி வருவாய், மதிப்­பீட்டு காலாண்டில், 113 ரூபா­யி­லி­ருந்து, 119 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இதே போன்று, சி.டி.எம்.ஏ., வாயி­லான சரா­சரி வரு­வாயும், 105 லிருந்து, 112ஆகஅதி­க­ரித்­துள்­ளது என, டிராய் மேலும்தெரி­வித்­துள்ளது.
இதற்­கி­டையே, தொலைத் தொடர்பு சேவை நிறு­வ­னங்கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, ‘மொபைல் நம்பர் போர்­ட­பி­லிட்டி’ வச­தியை வரும், மே மாதத்­திற்குள் முழு­மை­யாக அளிக்க வேண்டும் என, தொலைத் தொடர்பு துறை உத்­த­ர­விட்­டுள்­ளது.தற்­போது, இந்த வச­தியை ஒரு குறிப்­பிட்ட வட்­டத்­திற்குள் தான் பயன்­ப­டுத்த முடியும் என்ற நிலை உள்­ளது.தொலைத் தொடர்பு துறையின் இந்த புதிய உத்­த­ரவு செயல்­ப­டுத்­தப்­படும் நிலையில், உள்­நாட்டில், எங்கு சென்­றாலும், ஒரே மொபைல் எண்ணை தக்க வைத்து கொள்­வ­தோடு, தேவை­யானால், சேவை நிறு­வ­னங்­களை மாற்றி கொள்­ளலாம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)