பதிவு செய்த நாள்
11 நவ2014
05:04
புதுடில்லி: பங்குச் சந்தை நிலவரம் நன்கு உள்ளதையடுத்து, சென்ற அக்டோபரில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 10,95,653 கோடி ரூபாயை எட்டி சாதனை படைத்துள்ளது.இது, செப்டம்பர் மாதத்தில், 9,59,415 கோடி ரூபாயாக இருந்தது என, இந்திய பரஸ்பர நிதியங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.உள்நாட்டில், 45 பரஸ்பர நிதி நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. பங்குச் சந்தைகளில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு சிறப்பான அளவில் அதிகரித்துள்ளதையடுத்து, சென்ற அக்டோபரில் மட்டும், பரஸ்பர நிதியங்களின் சொத்து மதிப்பு, 1.24 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.அம்மாதத்தில் மட்டும், ‘சென்செக்ஸ்’, 1,200 புள்ளிகள் (5 சதவீதம்) அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற மே மாதத்தில் தான், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 10 லட்சம் கோடி ரூபாய் என்ற மைல்கல்லை முதன் முறையாக தாண்டியது.நடப்பாண்டு ஏப்ரல் – அக்டோபர் காலத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்ட கணக்குகளின் எண்ணிக்கை, 7.37 லட்சம் உயர்ந்து, 3 கோடியை எட்டியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|