பதிவு செய்த நாள்
11 நவ2014
05:04
சேலம்: தமிழகத்தில் காலண்டர்களின் நாள் காட்டி (கேக்) பேப்பர் தயாரிப்பை, காகித ஆலைகள் நிறுத்தியதன் காரணமாக, மார்க்கெட்டில் கடும் தட்டுப்பாடு நிலவுவதால், அதன் விலை, 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.காலண்டர்களின் தயாரிப்புக்கு, தேவையான பேப்பரை சப்ளை செய்த காகித ஆலைகள், காலண்டர் பேப்பர் தயாரிப்புக்கான மூலப்பொருள் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, பேப்பர் விற்பனையை பாதியாக குறைத்துக் கொண்டன.இதனால், மார்க்கெட்டில் காலண்டர் பேப்பருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை, டன்னுக்கு, 2,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
இதன்படி, 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான, ஒரு டன் காலண்டர் பேப்பர், தற்போது, 44 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்நிலையில், காலண்டர் பேப்பரை தயாரித்து வழங்கிய, சில ஆலைகள் தங்களின் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தி விட்டதாக கூறி, காலண்டர் பேப்பரின் சப்ளையை ஒட்டு மொத்தமாக நிறுத்தி விட்டன.இதையடுத்து, காலண்டர் பேப்பரின் விலை, டன்னுக்கு 1,000 ரூபாய் மேலும் கூடியுள்ளது.காலண்டர் பேப்பர் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, அதை பயன்படுத்தி தயார் செய்யப்படும் அனைத்து ரக நாள் காட்டி விலையும், (30 ரூபாய்) வரை உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|