பதிவு செய்த நாள்
11 நவ2014
05:05
புதுடில்லி :சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றை மானிய விலையில் விற்பனை செய்த வகையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்ய, 8,183 கோடி ரூபாய் ரொக்க மானியம் வழங்க பெட்ரோலிய அமைச்சகம், மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஜூலை–செப்டம்பர் வரையிலான காலாண்டில், இந்தியன் ஆயில் கார்ப்., (ஐ.ஓ.சி.,), பாரத் பெட்ரோலியம் (பீ.பி.சி.எல்.,) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்.பி.சி.எல்.,), ஆகியவை, மானிய விலையில், எரிபொருட்களை விற்பனை செய்ததன் மூலம், 24,563 கோடி ரூபாய் அளவிற்கு, அந்நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வரும், ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா, கெயில் ஆகிய நிறுவனங்கள், மேற்கண்ட மொத்த இழப்பில், 16,380 கோடியை ஈடு செய்யும். எஞ்சிய இழப்பான, 8,183 கோடி ரூபாயை, ரொக்க மானியமாக வழங்க மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளதாக, பெட்ரோலிய அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலைக் கட்டுப்பாடு விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து, வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு மட்டுமே, மத்திய அரசு மானியம் வழங்க வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|