பதிவு செய்த நாள்
11 நவ2014
05:07
சேலம்: சேலத்தில், நிலக்கடலை சீசன் உச்சத்தை எட்டி உள்ளதால், லீபஜார், வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நடப்பு சீசனில், 50 ஆயிரம் மூட்டைகள், நான்கு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில், பனைமரத்துப்பட்டி, வீரபாண்டி, வேம்படிதாளம், ஓமலுார், அயோத்தியாபட்டினம், வாழப்பாடி உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்ட நிலக்கடலை அறுவடை சென்ற ஆகஸ்டில் துவங்கியது.சேலம் லீபஜார், பள்ளப்பட்டி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு, செப்டம்பர் முதல் நிலக்கடலை விற்பனைக்கு வந்து கொண்டுஉள்ளது.இதை சேலம், ராசிபுரம், ஈரோடு, மதுரை, கரூர், தேனி மாவட்ட வியாபாரிகள், எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் வாங்கிச் செல்கின்றனர்.அந்த வகையில், சேலம் பள்ளப்பட்டி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடப்பாண்டில் நேற்று வரை, 17,360 மூட்டைகள், 1.50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுஉள்ளது.நேற்று மட்டும், 700 மூட்டை, ஏழு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதில், ஈரப்பதம் கொண்ட நிலக்கடலை, 60 கிலோ மூட்டை, 809 ரூபாய் முதல், 1,169 ரூபாய் வரையிலும், காய்ந்த ஈரப்பதம் இல்லாத நிலக்கடலை, 1,346 ரூபாய் முதல், 1,620 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் பள்ளப்பட்டி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம், 15 ஆயிரம் மூட்டைகள் நிலக்கடலை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.ஆனால், நடப்பாண்டில் நிலக்கடலை வரத்து அதிகரித்ததோடு, நவம்பர் மாதத்திலும் இதன் வரத்து விறுவிறுப்பாக உள்ளது.சேலம் லீபஜாரை பொறுத்தவரையில், இது வரையில் நடப்பாண்டில், 33,130 மூட்டைகள், 2.50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.இதில், ஈரப்பதம் கொண்ட நிலக்கடலை, 900 ரூபாய் முதல், 1,250 ரூபாய் வரையிலும், ஈரப்பதம் இல்லாத காய்ந்த நிலக்கடலை, 1,450 ரூபாய் முதல், 1,750 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டின் நிலக்கடலை சீசன் இந்த மாதம் இறுதி வரை, தொடரும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|