குன்னுார் ஏலத்தில் தேயிலை தேக்கம்குன்னுார் ஏலத்தில் தேயிலை தேக்கம் ... இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு - 61.55 இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு - 61.55 ...
கடன்பத்திர ஒதுக்கீடு: திரட்டிய தொகை ரூ.38,399 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2014
05:09

புதுடில்லி :கடந்த அக்டோபரில், இந்திய நிறுவனங்கள், கடன்பத்திர ஒதுக்கீடு மூலம் திரட்டிய தொகை, 34 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 38,399 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது.இது, முந்தைய செப்டம்பர் மாதத்தில், 58,578 கோடி ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.இதே போன்று, கடன்பத்திர ஒதுக்கீடுகளின் எண்ணிக்கையும், 312லிருந்து, 279 ஆக குறைந்துள்ளது.தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு என்பது, நிறுவனங்கள் தங்களது மூலதன தேவைகளுக்காக, நிறுவன முதலீட்டாளர்களுக்கு, கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டி கொள்வதாகும்.
பங்குச் சந்தை நிலவரம் நன்கு உள்ளதையடுத்து, நிறுவனங்கள் இவ்வகை வெளியீட்டின் மூலம் நிதி திரட்டி கொள்வது குறைந்து போயுள்ளது.மேலும், புதிய பங்கு வெளியீடு, உரிமை பங்கு வெளியீட்டில், நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதும், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடுகளுக்கு மவுசு குறைந்ததற்கு மற்றொரு முக்கிய காரணம்.நடப்பு நிதியாண்டில் இதுவரையில், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு மூலம், நிறுவனங்கள் திரட்டிய தொகை, 1.84 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.இது, கடந்த, 2013–14ம் முழு நிதியாண்டில், 2.76 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, ‘செபி’ தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)