பதிவு செய்த நாள்
11 நவ2014
05:13
மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று, ‘சென்செக்ஸ்’ ஒரு கட்டத்தில், 28,028 புள்ளிகளை எட்டி புதிய சாதனையை தொட்டது. அதேசமயம், ‘நிப்டி’ குறியீட்டு எண் புதிய சாதனை அளவுடன் நிறைவடைந்தது.மத்திய அமைச்சரவையின் விரிவாக்கத்தை அடுத்து, பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் மேலும் விறுவிறுப்படையும் என்ற நிலைப்பாட்டால், பங்கு வர்த்தகம் காலையில் துவங்கியதும் நன்கு இருந்தது. இந்நிலையில், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, எண்ணெய், எரிவாயு பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை, விற்பனை செய்ததையடுத்து, பங்கு வியாபாரம் சுணக்கம் கண்டது.
எனினும், நுகர் பொருட்கள் மற்றும் நுகர்வோர் சாதன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை, முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கியதை அடுத்து, வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் நிறைவடைந்தது.மும்பை பங்குச் சந்தை யின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 6.10 புள்ளிகள் அதிகரித்து, 27,874.73 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 7.25 புள்ளிகள் உயர்ந்து, 8,344.25 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|