தங்கம் விலை ரூ.256 சரிந்ததுதங்கம் விலை ரூ.256 சரிந்தது ... ரயில்வே வருவாய் ரூ.86,595 கோடி ரயில்வே வருவாய் ரூ.86,595 கோடி ...
‘கக்குட்டா’ ஒட்டுண்ணியால் காபி விவசாயிகள் கலக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2014
00:10

பந்தலுார்: பந்தலுார் பகுதிகளில் காபி செடிகளை ஆக்கிரமிக்கும், ஒட்டுண்ணியால் விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் பந்தலுார், கூடலுார் பகுதிகளில், காபி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
வயநாடு மற்றும் கர்நாடக மாநில காலநிலை இப்பகுதியில் நிலவி வருவதால், ‘ரோபஸ்டா, அரபிக்கா’ வகை காபி செடிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.நடப்பாண்டு அதிகளவு பெய்த பருவமழையால், காபி செடிகளில் காய்கள் அதிகளவில் காய்த்துள்ளது. நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள், மத்தியில் ஏற்பட்டுஉள்ளது.
இந்நிலையில், காபி செடிகளின் மீது ‘கக்குட்டா’ என்ற தாவரவியல் பெயரை கொண்ட (எல்லோ பெராசிட்) மஞ்சள் நிற ஒட்டுண்ணி செடிகள் அதிகளவில் படர்ந்து காணப்படுகிறது.காபி செடிகளின் வளர்ச்சியை பாதிக்கும் இந்த ஒட்டுண்ணி, வளர்வதற்கு வேர் ஏதும் தேவையில்லை என்பதுடன், இதன் சிறு பாகத்தை செடிகளின் மீது படரவிட்டாலே, பற்றி வளரும் தன்மை கொண்டது. காபி செடிகளில் அதிகளவில் படர்ந்து காணப்படுவதால், காபி செடிகளின் வளர்ச்சி, விளைச்சல் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
விவசாயி பால்ஜோஸ் கூறுகையில், இந்த ஒட்டுண்ணி செடி படர்வதை கட்டுப்படுத்த, மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இதன் சிறு பாகங்கள் செடிகளில் பற்றியிருந்தாலும், அவை மீண்டும் வளர்கிறது. இதனால் காபி விளைச்சல் பாதிக்கும்,’’ என்றார்.இந்த வினோத ஒட்டுண்ணி குறித்து ஆய்வு நடத்தி, இதன் பரவலை தடுக்க காபி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)