பதிவு செய்த நாள்
12 நவ2014
00:10
பந்தலுார்: பந்தலுார் பகுதிகளில் காபி செடிகளை ஆக்கிரமிக்கும், ஒட்டுண்ணியால் விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் பந்தலுார், கூடலுார் பகுதிகளில், காபி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
வயநாடு மற்றும் கர்நாடக மாநில காலநிலை இப்பகுதியில் நிலவி வருவதால், ‘ரோபஸ்டா, அரபிக்கா’ வகை காபி செடிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.நடப்பாண்டு அதிகளவு பெய்த பருவமழையால், காபி செடிகளில் காய்கள் அதிகளவில் காய்த்துள்ளது. நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள், மத்தியில் ஏற்பட்டுஉள்ளது.
இந்நிலையில், காபி செடிகளின் மீது ‘கக்குட்டா’ என்ற தாவரவியல் பெயரை கொண்ட (எல்லோ பெராசிட்) மஞ்சள் நிற ஒட்டுண்ணி செடிகள் அதிகளவில் படர்ந்து காணப்படுகிறது.காபி செடிகளின் வளர்ச்சியை பாதிக்கும் இந்த ஒட்டுண்ணி, வளர்வதற்கு வேர் ஏதும் தேவையில்லை என்பதுடன், இதன் சிறு பாகத்தை செடிகளின் மீது படரவிட்டாலே, பற்றி வளரும் தன்மை கொண்டது. காபி செடிகளில் அதிகளவில் படர்ந்து காணப்படுவதால், காபி செடிகளின் வளர்ச்சி, விளைச்சல் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
விவசாயி பால்ஜோஸ் கூறுகையில், இந்த ஒட்டுண்ணி செடி படர்வதை கட்டுப்படுத்த, மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இதன் சிறு பாகங்கள் செடிகளில் பற்றியிருந்தாலும், அவை மீண்டும் வளர்கிறது. இதனால் காபி விளைச்சல் பாதிக்கும்,’’ என்றார்.இந்த வினோத ஒட்டுண்ணி குறித்து ஆய்வு நடத்தி, இதன் பரவலை தடுக்க காபி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|