பதிவு செய்த நாள்
12 நவ2014
01:07
புதுடில்லி :நடப்பு, 2014 – 15ம் நிதியாண்டின் முதல் ஏழு மாத காலத்தில் (ஏப்., – அக்.,), ரயில்வே வருவாய், 86,595 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாயுடன் (77,274 கோடி ரூபாய்) ஒப்பிடுகையில், 12.06 சதவீதம் அதிகமாகும்.மேற்கண்ட மொத்த வருவாயில், சரக்கு போக்குவரத்து வாயிலாக ரயில்வேக்கு கிடைத்த வருவாய், 11.12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 51,878 கோடியிலிருந்து, 57,647 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே போன்று பயணிகள் மூலமாக ஈட்டப்பட்ட வருவாயும், 16.33 சதவீதம் உயர்ந்து, 21,248 கோடியிலிருந்து, 24,717 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.மேலும், இதர இனங்கள் வாயிலான வருவாயும், 6.58 சதவீதம் அதிகரித்து, 2,187 கோடியிலிருந்து, 2,331 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கணக்கீட்டு ஏழு மாத காலத்தில், பயண சீட்டுகள் விற்பனை, 0.94 சதவீதம் குறைந்து, 496.50 கோடியிலிருந்து, 491.86 கோடியாக சரிவடைந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|