பதிவு செய்த நாள்
12 நவ2014
01:53
மும்பை,: நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்றும் ஓரளவிற்கு நன்றாக இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், நுகர் பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்தனர்.
அதேசமயம், ரியல் எஸ்டேட், வங்கி மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்தனர்.இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 0.13 சதவீதம் மற்றும் 0.22 சதவீதம் ஏற்றம் கண்டன.
ஐரோப்பிய சந்தைகளிலும், வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 35.33 புள்ளிகள் அதிகரித்து, 27,910.06 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், மகிந்திரா, கெயில், ஆக்சிஸ் பேங்க், ரிலையன்ஸ் உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், பெல், ஐ.டி.சி., சிப்லா உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனப் பங்கின் விலை மாற்றமின்றியும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 18.40 புள்ளிகள் உயர்ந்து, 8,362.65 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|