ரயில்வே வருவாய் ரூ.86,595 கோடிரயில்வே வருவாய் ரூ.86,595 கோடி ... உருக்கு பயன்பாடு 4.31 கோடி டன்னாக வளர்ச்சி உருக்கு பயன்பாடு 4.31 கோடி டன்னாக வளர்ச்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்தியன் பேங்க் நிகர லாபம் ரூ.314 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2014
01:55

சென்னை: பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் பேங்க், நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை–செப்டம்பர்), 314 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது என, இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், டி.எம்.பாசின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், வங்கியின், மொத்த வருவாய், 4,340 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 4,078 கோடி ரூபாயாக இருந்தது.மேலும், வங்கியின் நிகர மதிப்பும், 11,462 கோடியிலிருந்து, 12,057 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இதே போன்று, வங்கியின் செயல்பாட்டு லாபம், 765 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கணக்கீட்டு காலாண்டில், நிகர லாபம், 2.8 சதவீதம் அதிகரித்து, 306 கோடியிலிருந்து, 314 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்., – செப்.,), வங்கியின் மொத்த வர்த்தகம், 2,84,081 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இதில், திரட்டப்பட்ட மொத்த டிபாசிட், 1,64,982 கோடியாகவும், வழங்கப்பட்ட கடன், 1,19,099 கோடி ரூபாயாகவும் உள்ளன.பிரதமர் மக்கள் – நிதி திட்டத்தின் கீழ், 17.58 லட்சம் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 110 கிளைகள் மற்றும் 131 ஏ.டி.எம்.,கள் புதிதாக துவக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை, 2,380ஆகவும், ஏ.டி.எம்.,களின் எண்ணிக்கை, 2,189ஆகவும் அதிகரித்துள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)