பதிவு செய்த நாள்
12 நவ2014
01:55
சென்னை: பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் பேங்க், நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை–செப்டம்பர்), 314 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது என, இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், டி.எம்.பாசின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், வங்கியின், மொத்த வருவாய், 4,340 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 4,078 கோடி ரூபாயாக இருந்தது.மேலும், வங்கியின் நிகர மதிப்பும், 11,462 கோடியிலிருந்து, 12,057 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இதே போன்று, வங்கியின் செயல்பாட்டு லாபம், 765 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கணக்கீட்டு காலாண்டில், நிகர லாபம், 2.8 சதவீதம் அதிகரித்து, 306 கோடியிலிருந்து, 314 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்., – செப்.,), வங்கியின் மொத்த வர்த்தகம், 2,84,081 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இதில், திரட்டப்பட்ட மொத்த டிபாசிட், 1,64,982 கோடியாகவும், வழங்கப்பட்ட கடன், 1,19,099 கோடி ரூபாயாகவும் உள்ளன.பிரதமர் மக்கள் – நிதி திட்டத்தின் கீழ், 17.58 லட்சம் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 110 கிளைகள் மற்றும் 131 ஏ.டி.எம்.,கள் புதிதாக துவக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை, 2,380ஆகவும், ஏ.டி.எம்.,களின் எண்ணிக்கை, 2,189ஆகவும் அதிகரித்துள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|