பதிவு செய்த நாள்
12 நவ2014
01:58
புதுடில்லி :இந்தியாவின் உருக்கு பயன்பாடு, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், 0.5 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 4.31 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இதன் பயன்பாடு, 4.29 கோடி டன்னாக இருந்தது என, உருக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது.உலகளவில், உருக்கு உற்பத்தியில், இந்தியா நான்காவது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது.நாட்டின் மொத்த உருக்கு பயன்பாட்டில், கட்டுமான துறை பங்களிப்பு, 60 சதவீதமாகவும், மோட்டார் வாகன துறை பங்களிப்பு, 15 சதவீதமாகவும் உள்ளன.
மேற்கண்ட இரண்டு துறைகளும் சுணக்கம் கண்டதையடுத்து, கணக்கீட்டு காலத்தில், உருக்கு பயன்பாடு மிக குறைந்த அளவே வளர்ச்சி கண்டுள்ளது.இதேபோன்று, இதன் ஏற்றுமதியும், 0.9 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 31.68 லட்சம் டன்னிலிருந்து, 31.98 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உருக்கு பொருட்கள் இறக்குமதி, 40.2 சதவீதம் அதிகரித்து, 47.41 லட்சம் டன்னாக எகிறியுள்ளது.பொருளாதார மந்த நிலை மற்றும் இறக்குமதி சரிவடைந்ததால் சென்ற 2013–14ம் நிதியாண்டில் நாட்டின் உருக்கு பயன்பாடு, நான்கு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாக, 0.6 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 7.39 கோடி டன்னாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|