பதிவு செய்த நாள்
13 நவ2014
00:36
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று விறுவிறுப்புடன் காணப்பட்டது.சாதகமற்ற சர்வதேச நிலவரங்களுக்கிடையிலும், அன்னிய மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, ஒரு கட்டத்தில், ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 28,114 புள்ளிகள் மற்றும் 8,407 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டு திரும்பின.
நேற்றைய வியாபாரத்தில், மோட்டார் வாகனம் மற்றும் வங்கி துறை குறியீட்டு எண் முறையே, 1.18 சதவீதம் மற்றும் 1.12 சதவீதம் ஏற்றம் கண்டன.அதேசமயம், மின்சாரம், உலோகம், பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை, குறைந்து காணப்பட்டது.ஐரோப்பிய சந்தைகளில், வர்த்தகம் சுணக்கத்துடன் காணப்பட்டது. அதேசமயம், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 98.84 புள்ளிகள் அதிகரித்து, 28,008.90 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஆக்சிஸ் பேங்க், பஜாஜ் ஆட்டோ, ஐ.டி.சி., உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், டாட்டா பவர், என்.டி.பி.சி., எல் அண்டு டி உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 20.65 புள்ளிகள் உயர்ந்து, 8,383.30 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|