பதிவு செய்த நாள்
13 நவ2014
17:38
மும்பை : இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. பணவீக்கம், தொழில்துறை உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. இதனால் ஒருகட்டத்தில் சென்செக்ஸ் 28,098.74 புள்ளிகள் வரை சென்றது. ஆனால், மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களின் மீதான கலால் வரியை உயர்த்தியதால் எண்ணெய் தொடர்பான பங்குகள் விலை சரிந்தன. ஆயினும் பங்குசந்தைகள் இறுதியில் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 68.26 புள்ளிகள் உயர்ந்து 27,940.64-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 25.45 புள்ளிகள் உயர்ந்து 8,357.85-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 16 நிறுவன பங்குகள் சரிந்தும், 14 நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன. குறிப்பாக பொதுத்துறை நிறுவன பங்குகள், உலோகம் தொடர்பான பங்குகள், வங்கி, ஆட்டோ, எரிசக்தி தொடர்பான பங்குகள் உயர்வுடன் முடிந்தன, எண்ணெய் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|