பதிவு செய்த நாள்
17 நவ2014
00:31
புதுடில்லி:நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்.,–செப்.,), இந்திய நிறுவனங்கள், மூலதனச் சந்தையிலிருந்து, 8,244 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 8,987 கோடி ரூபாயாக இருந்தது என, இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தெரிவித்துள்ளது.
நிறுவனங்களின் விரிவாக்க திட்டங்கள் மற்றும் செயல்பாட்டு மூலதன தேவைகளுக்காக, மேற்கண்ட தொகை திரட்டி கொள்ளப்பட்டுள்ளது.குறிப்பாக, 25 புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, 1,031 கோடி ரூபாயும், 10 உரிமை பங்கு வெளியீடுகள் மூலம், 2,795 கோடி ரூபாயும் திரட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள, 4,418 கோடி ரூபாய், கடன் சந்தை வாயிலாக திரட்டி கொள்ளப்பட்டுள்ளது.சென்ற 2012 – 13ம் நிதியாண்டில், மூலதனச் சந்தையிலிருந்து நிறுவனங்கள் திரட்டிய தொகை, 32,455 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த 2008 – 09ம் நிதியாண்டில் தான், நிறுவனங்கள் மிக குறைந்த அளவாக, மூலதன சந்தையிலிருந்து, 16,220 கோடி ரூபாயை திரட்டியிருந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|