பதிவு செய்த நாள்
17 நவ2014
00:37
மும்பை:இந்தியாவின் சேவைகள் துறை ஏற்றுமதி, கடந்த செப்டம்பரில், 77,640 கோடி ரூபாயாக (1,294 கோடி டாலர்) உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், சேவைகள் துறை ஏற்றுமதி, 5.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.ஏற்றுமதி அதிகரித்துள்ள அதே நேரத்தில், சேவைகள் இறக்குமதி, கணக்கீட்டு மாதத்தில், 9.1 சதவீதம் குறைந்து, 617 கோடி டாலராக சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சேவைகள் ஏற்றுமதி, 1,224 கோடி டாலராகவும், இறக்குமதி, 7.5 சதவீதம் உயர்ந்து, 677 கோடி டாலராகவும் இருந்தன.
நடப்பு நிதியாண்டின் ஏப்., – செப்., வரையிலான காலத்தில், ஒட்டுமொத்த சேவைகள் துறை ஏற்றுமதி, 7,905 கோடி டாலராகவும், இதன் இறக்குமதி, 4,304 கோடி டாலராகவும் உள்ளன.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேவை துறையின் பங்களிப்பு, 60 சதவீதமாக உள்ளது.கடந்த, 2011 – 12ம் நிதியாண்டில், இத்துறையின் ஏற்றுமதி, 16,701 கோடி டாலராகவும், இறக்குமதி, 8,819 கோடி டாலராகவும் இருந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|