பதிவு செய்த நாள்
17 நவ2014
00:38
மும்பை:நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் (ஏப்.,– அக்.,), உள்நாட்டில் முன்பேர சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டு மொத்த வர்த்தகம், 51.79 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 34.52 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 71.60 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.குறிப்பாக, வேளாண் விளை பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகம், 24 சதவீதம் சரிவடைந்து, 8.82 லட்சம் கோடியிலிருந்து, 6.70 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே போன்று, தங்கம், வெள்ளி மீதான வர்த்தகமும், அதிகளவாக, 62.28 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 32.17 லட்சம் கோடியிலிருந்து, 12.14 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துஉள்ளது.
இது தவிர, இதர உலோகங்கள் மீதான வர்த்தகமும், 42.75 சதவீதம் குறைந்து, 13.12 லட்சம் கோடியிலிருந்து, 7.51 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.கணக்கீட்டு காலத்தில், எரிசக்தி மீது மேற்கொள்ளப்பட்ட முன்பேர வர்த்தகமும், 53.28 சதவீதம் சரிவடைந்து, 17.48 லட்சம் கோடியிலிருந்து, 8.17 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக எப்.எம்.சி., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|