பதிவு செய்த நாள்
18 நவ2014
00:46
மும்பை:சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால், நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று, காலையில் மந்தமாக இருந்தது.இந்நிலையில், மதியத்திற்கு பிறகான வர்த்தகத்தில், வெளிநாட்டு மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள், முன்னணி நிறுவனங்களின் பங்கு களை அதிகளவில் வாங்கினர். இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ தலா, 0.47 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டின. நேற்றைய வியாபாரத்தில், அடிப்படை கட்டமைப்பு துறையின் குறியீட்டு எண், அதிகளவாக, 1.85 சதவீதம் உயர்ந்தது. மின்சாரம், மோட்டார் வாகனம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கும், முதலீட்டாளர் களிடையே வரவேற்பு காணப்பட்டது.
அதேசமயம், உலோகம் மற்றும் மருந்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் மட்டும் குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 131.22 புள்ளிகள் அதிகரித்து, 28,177.88 புள்ளிகளில் நிலைபெற்றது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹீரோ மோட்டோகார்ப், ரிலையன்ஸ் உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், சன்பார்மா, சேசா ஸ்டெர்லைட் உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 40.85 புள்ளிகள் உயர்ந்து, 8,430.75 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|