பதிவு செய்த நாள்
18 நவ2014
23:48
புதுடில்லி:முதலீட்டு நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளதையடுத்து, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 5.6 சதவீதமாகவும், வரும் நிதியாண்டில், 6.5 சதவீதமாகவும் அதிகரிக்கும் என, பிட்ச் தரக்குறியீட்டு நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
கடந்த நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, 4.7 சதவீதமாக சுணக்கம் கண்டிருந்தது.மத்திய அரசு, நிதி ஒருங்கிணைப்பு மற்றும் அடிப்படை சீர்திருத்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு வருவது, பொருளாதார வளர்ச்சி மேம்பட முக்கிய காரணிகளாக அமையும். அதேசமயம், பணவீக்க விகிதம், வாராக் கடன் அதிகரிப்பால், வங்கிகளின் சொத்து மதிப்பு பாதிப்புக்குள்ளாகியுள்ளது போன்றவை, இடர்பாட்டை ஏற்படுத்தும் அம்சங்களாக உள்ளது என, பிட்ச் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|