பதிவு செய்த நாள்
18 நவ2014
23:51
புதுடில்லி:அன்னிய நிதி நிறுவனங்கள், கடந்த அக்டோபரில், பங்கேற்பு ஆவணங்கள் (பார்டிசிப்பேட்டரி நோட்ஸ்) மூலம், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு, 2.66 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இது, கடந்த செப்டம்பரில், 2.22 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது.இதற்கு முன், கடந்த, 2008ம் ஆண்டு பிப்ரவரியில் தான், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, மிகவும் அதிகபட்சமாக, 3.23 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதன்பின், நடப்பாண்டு அக்டோபரில் தான், இவ்வகையிலான முதலீடு சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் அதிக நிகர சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள், அன்னிய நிதி நிறுவனங்கள் வழங்கும் பங்கேற்பு ஆவணங்கள் மூலம், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதனால், அவர்களுக்கு நேரடி பதிவிற்கான நேரம் மற்றும் செலவு ஆகியவை மிச்சமாகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|