பதிவு செய்த நாள்
18 நவ2014
23:54
புதுடில்லி:நடப்பு கணக்கு பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, ஓரிரு நாளில், தங்கம் இறக்குமதிக்கு மேலும் சில கட்டுப்பாடுகளை அறிவிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பண்டிகை காலத்தையொட்டி, சென்ற அக்டோபர் மாதத்தில், தங்கம் இறக்குமதி, மதிப்பின் அடிப்படையில், 109 கோடி டாலரிலிருந்து, 417 கோடி டாலராக எகிறியுள்ளது.இது, அளவின் அடிப்படையில், வெறும் 24 டன்னிலிருந்து, 150 டன்னாக மிகவும் அதிகரித்துள்ளது.
எனவே, தங்கம் இறக்குமதி எகிறியுள்ளது குறித்து, நிதி அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது.இதையடுத்து, ஓரிரு நாட்களில், தங்கம் இறக்குமதி தொடர்பாக மேலும் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|