பதிவு செய்த நாள்
22 நவ2014
01:44
புதுடில்லி:கடந்த அக்டோபர் மாதத்தில், வாடிக்கையாளர்களிடம் அதிகம் வரவேற்பை பெற்று, விற்பனையான முதல் 10 மாடல் கார்களில், ஆறு மாடல்கள் மாருதி நிறுவனத்தைச் சேர்ந்தவை. இதில், அண்மையில் மாருதி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சியாஸ் காரும் அடங்கும் என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.
இதன்படி, கார் விற்பனையில், முன்னணி 10 பிராண்டுகளில், மாருதி ஆல்டோ தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.இதையடுத்து, டிசைர், வேகன் ஆர், ஸ்விப்ட் ஆகியவை உள்ளன.முன்னணி, 10 பிராண்டுகளில், ஹூண்டாயின் எலைட் ஐ20 ஐந்தாவது இடத்திலும், கிராண்ட் ஐ10 மற்றும் இயான் கார்கள், ஆறு மற்றும் ஏழாவது இடத்திலும் உள்ளன.
அண்மையில், மாருதி அறிமுகம் செய்த, சியாஸ் கார், எட்டாவது இடத்திலும், சிலெரியோ ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி கார், 10வது இடத்தைப் பிடித்துள்ளது என, சியாம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|