பதிவு செய்த நாள்
03 டிச2014
00:27
புதுடில்லி:பெட்ரோல், டீசல் மீதான, உற்பத்தி வரி எனப்படும் கலால் வரியை, மத்திய அரசு நேற்று மீண்டும் அதிகரித்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை வழக்கமாக உயரும். ஆனால், ‘விலை உயர்த்தப் படவில்லை; பொதுமக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது; வரி உயர்வை, பெட்ரோலிய நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 12ல், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, லிட்டருக்கு, 1.50 ரூபாய் அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டது; அப்போதும் விலைகள் உயரவில்லை. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அபரிமிதமாக குறைந்துள்ளதால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கிடைத்து வரும் லாபத்தில், இந்த வரி விதிப்பு சமன் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது.அது போல, நேற்றும் கலால் வரி உயர்த்தப்பட்டது. பெட்ரோலுக்கு, லிட்டருக்கு, 2.25 ரூபாயும், டீசலுக்கு, 1 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
எனினும், இப்போதும், சில்லரை விலையில் உயர்வு இருக்காது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.சர்வதேச சந்தையில், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை, பேரல் ஒன்றுக்கு, நவ., 28ல், 70 டாலராக இருந்தது; நேற்று, 67 டாலராக குறைந்தது. இது, பெட்ரோலியநிறுவனங்களுக்கு லாபத்தை அதிகரித்து உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|