பதிவு செய்த நாள்
04 டிச2014
01:10
சிவகங்கை:வரத்து குறைவால் ‘ருசி’ மிகுந்த அயிரை மீன் கிலோ 800 ரூபாய்க்கு சிவகங்கையில் விற்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், கண்மாய், குளங்கள், மற்றும் நீர் நிலைகளில் ஓரளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. நிரம்பிய கண்மாய்களில் இருந்து வெளிவரும் உபரிநீர், தடுப்பு அணை பகுதிகளில் தடுப்பு அமைத்து இரவு விடிய, விடிய காவல் காத்து அயிரை மீன் பிடிக்கின்றனர்.
கண்மாயில் கிடைக்கும் ‘ருசி’ மிகுந்த இந்த மீனுக்கு கிராக்கி அதிகம். பலர் இந்த மீனை போட்டி போட்டு வாங்கிச் செல்வர்.கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், இந்த மீன் வரத்து அரிதாக காணப்பட்டது. தற்போது, பெய்த மழையில் இந்த மீன் கிடைத்து வருகிறது. இதன் விலையை கேட்டால், பலருக்கு தலை சுற்றலே வந்துவிடும். கிலோ 800 முதல் 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கருங்காலக்குடி மீன் வியாபாரி ஏ.கருப்பையா கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மீன் வியாபாரம் செய்து வருகிறேன். மதுரை உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து வரும் மொத்த மீன் வியாபாரிகள் இந்த மீனை போட்டி, போட்டி அதிக விலைக்கு கேட்கின்றனர். வரத்து குறைவால், கிலோ 800 முதல் 1000 ரூபாய் வரை கேட்கின்றனர். உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த மீனை ரூ. 800க்கு விற்கிறேன்.
அதுவும் வரத்தை பொருத்து வாடிக்கையாளர்களுக்கு அரை கிலோவிற்கு மேல் யாருக்கும் விற்பதில்லை. சந்தைக்கு மீன் வந்தவுடன் விற்று விடும், என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|