பதிவு செய்த நாள்
05 டிச2014
17:43
மும்பை : இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர துவக்கத்தில் பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததால் முக்கிய நிறுவன பங்குகளான எண்ணெய், எரிவாயு மற்றும் ஐடி தொடர்பான பங்குகள் சரிந்தன. இதன்காரணமாக பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 104.72 புள்ளிகள் சரிந்து 28,458.10-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 26.10 புள்ளிகள் சரிந்து 8,538.30-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 22 நிறுவன பங்குகள் சரிவுடன் முடிந்தன. குறிப்பாக சன் பார்மா, இன்போசிஸ், ஹிண்டால்கோ, பெல், ஓஎன்ஜிசி., ஹீரோ மோட்டோ கார்ப், எஸ்பிஐ., உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|