பதிவு செய்த நாள்
11 டிச2014
00:22

சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை, அதிரடியாக, சவரனுக்கு, 392 ரூபாய் உயர்ந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,463 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,704 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 26,860 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 49 ரூபாய் உயர்ந்து, 2,512 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 392 ரூபாய் அதிகரித்து, 20,096 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 530 ரூபாய் உயர்ந்து, 27,390 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து, நீண்ட நாட்களுக்கு பின், ஒரு சவரன், தங்கம் விலை, மீண்டும் 20 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையானது. நேற்று, ஒரு கிராம் வெள்ளி, 40.80 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 38,165 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|