பதிவு செய்த நாள்
17 டிச2014
17:42
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்படும் சரிவு காரணமாக இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக சரிவுடன் முடிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கம் காரணமாக இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் துவங்கின. மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்தது மற்றும் வர்த்தக பற்றாக்குறை போன்ற காரணங்களால் நாள்முழுக்க பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 71.31 புள்ளிகள் சரிந்து 26,710.13–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 37.80 புள்ளிகள் சரிந்து 8,029.80–ஆகவும் முடிந்தன. முன்னதாக வர்த்தகத்தின்போது நிப்டி 8000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் 1038 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1780 நிறுவன பங்குகள் சரிந்தும், 97 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன. குறிப்பாக சிப்லா, ஹீரோ மோட்டோ கார்ப், ஐடிசி., சன் பார்மா, பார்தி ஏர்டெல், டாடா பவர், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எல்அண்ட்டி., பெல், என்டிபிசி., எச்டிஎப்சி., மற்றும் இந்துஸ்தான் யுனிலீவர் போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. அதேசமயம், ரிலையன்ஸ், கெயில், ஸ்டெர்லைட், ஓன்ஜிசி., எஸ்பிஐ., ஐசிஐசிஐ., நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|